Thursday, 31 October 2019

பொதுஜனம் அரசியல்வாதி ஓவர் வரி ஓட்டுக்குப் பணம்



#பொது_ஜனம்: யோவ் உங்க கட்சி தானே ஆட்சில இருக்கு. வரிய கொஞ்சம் கொறச்சுப் போடுங்கயா. கட்ட கஷ்டமா இருக்குல்ல?

#அரசியல்வாதி: ஏன் மக்களே, நாங்க ஓட்டுக்குப் பணம் குடுக்கும் போது மட்டும், நல்ல வக்கனையா அவ்ளோ குடு, இவ்ளோ குடுனு கேட்டு வாங்கிக்குறீங்க? 

-ஆனா ஓட்டு போட்டு முடிச்சதுக்கு அப்பறம், இப்ப வரிய கொஞ்சம் கூட போட்டா மட்டும், அதக் கட்றதுக்கு ஒங்களுக்கு கசக்குதோ?

போலீஸ் லஞ்சம் பொதுஜனம் பணம் பணக்கார வர்க்கம்



#போலீஸ்: ஏன்டா லஞ்சம் குடுக்க பணம் இல்லேங்குற? தொழில் பண்ணி பணம் சம்பாதிக்க வேண்டியது தான?

#பொது_ஜனம்: அட போங்க சார். பணக்காரனுங்க எல்லாம் மோசடி, முறைகேடு பண்ணாம, இயற்கைய நாசப்படுத்தாம தொழில் பண்ணா, அந்த பணக்கார வர்க்கத்தின் லாபம் குறையும். அவனுங்க தொழில் படுத்துடும்.

-அந்த கேப்ல ஏழைகள் எல்லாரும் தொழில் பண்ணி சம்பாதிச்சா, எல்லா ஏழைகளுமே பணக்காரனாகி, நீங்க கேட்ட உடனே, டக்குனு லஞ்சத்த தூக்கி குடுத்துறலாம். ஆனா ஏழைங்க எல்லாருமே தொழில் பண்ண முடியாது.இதெல்லாம் நடைமுறைல சாத்தியமில்ல. அப்டி நடக்கவும் விட மாட்டானுங்க அந்த பணக்காரனுங்க.

-அதனால நாங்க எங்க வேலைய மட்டும் பாத்துக்குறோம். எதுக்கு சார் எங்களுக்கு தேவையில்லாம பெரிய இடத்து வம்பு?